உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.