கோவையில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி

March 15, 2024

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.இந்நிலையில் வருகிற 18 ஆம் தேதி […]

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.இந்நிலையில் வருகிற 18 ஆம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகை தரவுள்ள பிரதமர் கோவை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் பங்கேற்கும் ரோடு ஷோ கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர் எஸ் புரம் தலைமை தபால் நிலையம் வரை நடத்தப்பட உள்ளது. மேலும் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் கோவையில் பலத்தை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு 17ஆம் தேதி முதல் கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. மேலும் கோவை கவுண்டம்பாளையம், ஆர். எஸ்.புரம், சாய்பாபா காலனி, துடியலூர் உள்ளிட்ட பகுதிகள் ரெட் ஜோன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 19ஆம் தேதி வரை 5 நாட்கள் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu