இந்தியாவின் கிழக்கு கொள்கையில் ஏசியன் மையத் தூணாக இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வாழும் இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதற்கு பின்னர் ஏசியன்-இந்தியா மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நம்முடைய கூட்டாண்மையானது நான்காவது தசாப்தத்தில் நுழைந்துள்ளது. இந்தியாவின் கிழக்கு கொள்கையில் ஏசியன் மையத் தூணாக இருக்கிறது. இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கிய இடம் வகிக்கிறது. உலக வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியின் மையமாக உள்ளது.
நம்முடைய பரஸ்பர ஒத்துழைப்பில் முன்னேற்றம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.