'இந்தியா மொபைல் காங்கிரஸ்' நிகழ்வு - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

October 27, 2023

இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் வகையில், ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வு இன்று டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இந்த 3 நாள் நிகழ்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வை தொடக்கி வைத்தார். ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், “இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஒரு வருடத்திற்குள், இந்தியா, 5ஜி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய உயரத்தை […]

இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் வகையில், ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வு இன்று டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இந்த 3 நாள் நிகழ்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வை தொடக்கி வைத்தார்.
‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், “இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஒரு வருடத்திற்குள், இந்தியா, 5ஜி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் 5ஜி பேஸ் ஸ்டேஷன்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். மேலும், நாடு தழுவிய முறையில், 100 5ஜி லேப்களை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், குமார் மங்கலம் பிர்லா, ஆகாஷ் அம்பானி, சுனில் பார்தி மிட்டல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu