அயோத்தியில் ராமர் கோவில் புராண பிரதிஷ்டை விழா வெகு விமர்சையாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க உலகெங்கும் இருந்து ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். காலை 11:30 மணிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கோவில் கருவறைக்குள் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சென்று வழிபாடு செய்தனர். பாரம்பரிய முறைப்படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அயோத்தி நகரம் முழுவதும் கோலாகலமாக உள்ளது.