பாஜக கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிப்படை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலங்களில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என உறுதியாக உள்ளது. இதற்காக தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக அடிக்கடி மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள ரோடு ஷோவிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் கேரளா வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக விரைவில் மோடி கேரளா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் கேரளா வர உள்ளனர்.