பிரதமர் மோடி மற்றும் சித்தராமையா சந்திப்பு.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையாவும், துணை முதல் மந்திரி சிவகுமாரும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடியிடம், கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனை பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வளத்தைப் பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியை செய்து கொள்கின்றன. மத்திய ஜல்சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழலியலோடு இணைந்து பல புதிய திட்டங்களை வெளியிட இருக்கின்றது. இதனால் கர்நாடகாவின் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் எனவும், விரைவில் அந்த திட்டங்களை அனுமதி வழங்குவதாக பிரதமர் மோடி கூறினார்.