ஆந்திராவில் பசுமை தொழில் பூங்கா அமைப்பதற்கான 80 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பசுமை தொழில் பூங்கா மற்றும் ஹைட்ரஜன் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இது 1200 ஏக்கரில் நடைபெறுகிறது, அதில் ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த மையத்தில், அமோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் மையங்களை உருவாக்கி, 20 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம், ஆந்திரா மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டம், 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த முயற்சிகள் ஆந்திராவின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு 29 ஆம் தேதி மோடி ஆந்திரா வரவுள்ளார்.













