குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைப்பது மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு குஜராத் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் 5950 கோடி ரூபாய் செலவிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன. இதில் முதல் நாளான இன்று பனாஸ் கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து பின்னர் மஹ்சானவில் உள்ள கெராலோ தபோடா கிராமத்திற்கு சென்று பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய ரயில்வே, குஜராத் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பலவற்றை தொடங்கி வைக்க இருக்கிறார். இதனை அடுத்து மேஹசனா, அஹமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் 16 வளர்ச்சிக்கான முயற்சிகளை தொடங்கி வைக்கிறார்.