பஞ்சாப் நேஷனல் வங்கியில், 1.8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் பண மோசடியில் நீரவ் மோடி ஈடுபட்டார். அதன் பின்னர், அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, இந்திய அரசு பிரிட்டன் நீதிமன்றத்தை கோரியது. அதனை எதிர்த்து, நீரவ் மோடி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், மன வேதனையால் தற்கொலை செய்து கொள்வார் என்று அவர் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து, நீரவ் மோடி, பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பொது நோக்கம் இருப்பதாக உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளும். அல்லது, அவர் ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் உதவியை கோரலாம். இவை இரண்டில் ஒன்று நேரிடும் பட்சத்தில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த, மேலும் காலதாமதம் ஆகும். அதுவரையில், அவர் பிரிட்டன் சிறைச்சாலையில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.