உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவி நிறுத்தம் - போலந்து அறிவிப்பு

September 21, 2023

உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக, போலந்து செயல்பட்டு வந்தது. உக்ரைன் ரஷ்யா போரில், 320 பீரங்கிகள் மற்றும் 14 மிக் 29 போர் விமானங்களை உக்ரைனுக்கு போலந்து வழங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகளை நிறுத்த உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன. தற்போது, ரஷ்யா கருங்கடல் பகுதியை ஆக்கிரமித்து உள்ளதால், அண்டை நாடுகள் வழியாக உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. […]

உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக, போலந்து செயல்பட்டு வந்தது. உக்ரைன் ரஷ்யா போரில், 320 பீரங்கிகள் மற்றும் 14 மிக் 29 போர் விமானங்களை உக்ரைனுக்கு போலந்து வழங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகளை நிறுத்த உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன. தற்போது, ரஷ்யா கருங்கடல் பகுதியை ஆக்கிரமித்து உள்ளதால், அண்டை நாடுகள் வழியாக உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அந்தந்த நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், தானியங்கள் போக்குவரத்து மட்டுமே செய்யப்படும்; அந்த நாடுகளில் விற்பனை செய்யப்படுவதில்லை. அண்டை நாடுகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய ஒன்றியம், விற்பனை செய்வதற்கான தடையை விதித்திருந்தது. அண்மையில், இந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது. எனவே, உள்நாட்டு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, உக்ரைனின் அண்டை நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஏற்க மறுத்துவிட்டன. இதனால், அவை ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு வழங்கி வருவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். தற்போது, உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிக்க உள்ளதால் உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகள் நிறுத்தப்படும் என போலந்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu