தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் குற்றச் செயலில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர், 96 வெளிநாட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. . சென்னையில் குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களில் 21 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து பிற மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர்கள் குறித்த ஆதார் விவரம் சேகரிக்கப்படுகிறது. தொழிலாளர் நலத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டேட்டா பேஸ் தயாரிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நாளை தாண்டி தங்கும் வெளிநாட்டவர், சட்டவிரோதமாக தங்கும் வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.