பசிபிக் பெருங்கடலில் உள்ள தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப் போர்பயிற்சி நடத்தி வருகிறது.
சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இரு நாடுகளும் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இதில் அமெரிக்காவின் B-1B குண்டுவீச்சு விமானங்கள், F/A-50 போர் விமானங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.