தமிழகம் முழுவதும் நாளை 58 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சொட்டு மருந்து முகாம் காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.