நாளை முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் எனவுன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் கூட்டமா கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் தகுதியான அனைவருக்கும் டோக்கன் வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள். மேலும் டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில் ரொக்க பணத்தை பொங்கல் தொகுப்புடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் நாளை முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்கும் போது பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது.