பொங்கல் பண்டிகைக்கு 2.21 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொங்கல் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலைகள்
வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் வழியாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச வேஷ்டி மற்றும் சேலைகளும் வழங்கப்பட உள்ளன. ரேஷன் கடைகளில் ஜனவரி 9-ந்தேதி முதல் பொங்கல் தொகுப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு முன், 3 அல்லது 4-ந்தேதியில் தொடங்கும் டோக்கன் விநியோகிப்பு வீடு வீடாக நடைபெறும். 100 பேர் காலை மற்றும் 100 பேர் மாலை என, டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.