பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் கிளம்பி செல்கின்றனர். இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. தாம்பரம்-நெல்லை (06021), நெல்லை - சென்னை எழும்பூர் (06022), தாம்பரம்-நாகர்கோவில் (06041), நாகர்கோவில் -தாம்பரம் (06042), திருநெல்வேலி (06057/06058) என மொத்தம் மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.