கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப்பின் மறைவுக்கான 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் பிரான்சிஸ் தனது கல்லறையை ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் அமைக்க விரும்பினாரென கூறப்படுகிறது. பொதுவாக, போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ் மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள், ஆனால் பிரான்சிஸ் சவப்பெட்டியில் அடக்கம் செய்ய விரும்பினார். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார். புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் சேர்ந்து, ரகசிய வாக்குச்சீட்டினூடாக பெரும்பான்மையுடன் வாக்களிப்பார்கள்.