இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி பெயரில் போலி இணையதளம்

தபால் துறை வங்கி பெயரில் போலி இணையதளம் தொடங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு புதிய ஆன்லைன் மோசடிகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், சைபர் பிரிவு இது குறித்தான எச்சரிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு சைபர் தேர்வு கூடுதல் டி.ஜி.பி. செய்தி குறிப்பில் கூறியுள்ளார். […]

தபால் துறை வங்கி பெயரில் போலி இணையதளம் தொடங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.

பொதுமக்களுக்கு புதிய ஆன்லைன் மோசடிகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், சைபர் பிரிவு இது குறித்தான எச்சரிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு சைபர் தேர்வு கூடுதல் டி.ஜி.பி. செய்தி குறிப்பில் கூறியுள்ளார். குறுஞ்செய்தி வழியாக வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அனுப்புகின்றனர். மேலும் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பான் கார்டு, வாடிக்கையாளர்களின் அடையாள எண், செல்போன் எண், பிறந்த எண் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும் கூறுகின்றது. இது தகவல்களை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பின் ஓ.டி.பி. மூலம் உறுதி செய்ய வேண்டும் இதன் மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக மோசடி நம்பரின் வங்கி கணக்குக்கு பணம் மாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறு வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை இணையத்திலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu