மகாராஷ்டிரா மாநிலத்தின் இடைத்தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சில மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மகாராஷ்டிராவின் 30 அகோலா மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.