பொறியியல் தேர்வுகள் 5 மாவட்டங்களில் ஒத்திவைப்பு

December 19, 2023

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கனமழையால் நெல்லை,தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் […]

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கனமழையால் நெல்லை,தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu