கனமழையின் காரணமாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் dtc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.