தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர்கள் மின் மீட்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. இதில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்டர் கோரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் மீட்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால் பற்றாக்குறை காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர்களை நுகர்வோர்கள் வாங்கிக் கொள்ளலாம் என மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் ஒரு முனை மீட்டர் விலை ரூ.970 எனவும், மும்முனை மீட்டர் ரூபாய் 2610 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் இதனை வாங்கிய பின்பு மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு வழங்க வேண்டு.ம் அதனை ஊழியர்கள் சோதனை செய்து பின்னர் வீட்டில் பொருத்துவார்கள். மேலும் சொந்தமாக மீட்டர் வாங்கும் நுகர்வோர்களிடமிருந்து வைப்புத் தொகை வசூலிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.