கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு உள்ள இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.