வருடாந்திர பராமரிப்பு காரணமாக கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் இரண்டாவது மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் 60 நாட்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள இரண்டு மின் உலைகளும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடையது. இதில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உறுத்தத்தை நிறுத்தப்படும். அவ்வகையில் இரண்டாவது அணுஉலையில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது