பவர் கிரிட் நிறுவனம், 2 எரிசக்தி பரிமாற்ற திட்டங்களில் ஈடுபட உள்ளது. இதற்காக, 4071 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டு திட்டத்திற்கு, நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, கர்னூல் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, எரிசக்தி பரிமாற்றத்திற்காக 3546.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நவம்பர் 2024 ல் செயலாகும் என்று கருதப்படுகிறது. இரண்டாவதாக, கிழக்கு பகுதி விரிவாக்கத்திற்காக 524.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நவம்பர் 2025ல் செயலாகும் என்று கருதப்படுகிறது.