இன்று, பப்புவா நியூ கினியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே, 448 கிலோமீட்டர் தொலைவில், 200 கிலோமீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், அங்கு இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.