உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பில் உயிர்பலி குறித்த தகவல் ஏதும் வரவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள குடியிருப்புகளிலும் தீ பற்றியது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.