கடந்த திங்கட்கிழமை, ஓபன் ஏஐ நிறுவனம் ஜிபிடி 4 செயலிக்கான சாட்ஜிபிடி 4o மேம்படுத்தலை வெளியிட்டது. ஆடியோ, டெக்ஸ்ட் மற்றும் வீடியோ அம்சங்களில் பல்வேறு நவீன வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை உருவாக்கியதில் இந்தியாவின் புனே நகரத்தைச் சேர்ந்த பிரபுள்ளா தரிவால் என்ற இளைஞரின் பெரும்பங்கு உள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“கடந்த 2016 மே மாதத்தில், ஓபன் ஏஐ நிறுவனத்தில் பிரபுள்ளா தரிவால் இணைந்தார். இவரது திறமை, உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை மற்றும் உறுதிப்பாடு ஆகியவையே சாட்ஜிபிடி 4o உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்த போகும் இந்த சாதனத்தை முதுகெலும்பு போல தாங்கி நின்றது இவர்தான்” என சாம் ஆல்ட்மேன் புகழ்ந்துள்ளார்.