சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை உயர்ந்தது.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா, கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். இதன் காரணமாக, பல்வேறு இடங்களிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் விமானங்களின் கட்டணங்களில் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகள் மற்றும் உள்ளூர்விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் விமான கட்டணம் ரூ.59,000 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். அமாவாசை திதி வரவிருக்கும் நிலையில், இந்த உயர்வு இன்னும் 3 நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.