முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள புகார் கடிதத்தை ஜனாதிபதி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார்.
ஜனாதிபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள கடிதத்தில் கவர்னருக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அதன் விவரம்:- சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டமுடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார். இது மாநில நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் பேரவை அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானது. அரசியலமைப்புக்கு முரணானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தை ஜனாதிபதி முழுமையாக படித்து பார்த்து விட்டு அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு அந்த கடிதத்தை கொண்டு சென்று அதிகாரிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.