சென்னைஉயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
சென்னைஉயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.