குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதனன்று நியூசிலாந்து வந்தடைந்தார். அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக நியூசிலாந்தின் ராயல் கார்டு ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது வர்த்தகம், கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான தங்களுடைய உறுதிமொழியை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். அங்கு நடந்த சர்வதேச கல்வி மாநாட்டில் முர்ம உரையாற்றினார். அப்பொழுது கல்வி சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி என்று உரையாற்றினார். நியூசிலாந்தில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் இந்திய மாணவர்கள் என்றும் தற்போது 8000 இந்திய மாணவர்கள் நியூசிலாந்தில் கல்வி பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.