இந்தியா-மலாவி இடையே கலை, கலாசாரம், இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் மருந்து தயாரிப்பு போன்ற துறைகளுக்கு உட்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மலாவி நாட்டிற்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி வரவேற்றார். பின்னர், முர்மு மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இந்தியா-மலாவி இடையே கலை, கலாசாரம், இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் மருந்து தயாரிப்பு போன்ற துறைகளுக்கு உட்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மேலும், மலாவி நாட்டிற்கு 1,000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் போன்ற மனிதாபிமான உதவிகளை முர்மு வழங்கினார். அதோடு, மலாவியில் நிரந்தர செயற்கை மூட்டு பொருத்துதல் மையம் அமைக்க இந்திய அரசு ஆதரவு வழங்கும் என்று அவர் அறிவித்தார்.