இந்தியா- மொரிடேனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

October 17, 2024

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மொரிடேனியா ஜனாதிபதி ஆல்ட் கசோனி முன்னிலையில் இரு நாடுகள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது முதல் அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் பயணம் செய்கிறார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியில், மொரிடேனியா சென்ற முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். பின்பு, நாக்சாட்டில் உள்ள இந்திய சமூகத்துடன் […]

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மொரிடேனியா ஜனாதிபதி ஆல்ட் கசோனி முன்னிலையில் இரு நாடுகள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது முதல் அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் பயணம் செய்கிறார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியில், மொரிடேனியா சென்ற முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார்.

பின்பு, நாக்சாட்டில் உள்ள இந்திய சமூகத்துடன் கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். பின்னர், முர்மு மற்றும் ஆல்ட் கசோனி முன்னிலையில் இரு நாடுகள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன்படி, 2024-2028 ஆண்டுகளுக்கான இந்திய கலாச்சார பரிமாற்ற திட்டம், விசா இல்லாமல் அரசுமுறை மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கான ஒப்பந்தங்கள் அடங்கியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu