உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

March 14, 2024

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பொது சிவில் சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் போதுமான சம்மதம் தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆளுனர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு […]

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பொது சிவில் சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் போதுமான சம்மதம் தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆளுனர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த பொது சட்ட சிவில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் ஆகிறது. பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu