ஜனாதிபதி ஜோ பைடன், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு, அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்குகளில், ஹண்டர் பைடனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவ்வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டாலும், அவர் சிறை செல்லமாட்டார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவர் அடுத்த மாதம் பதவியேற்கிறார். அதற்குள், தற்போதைய ஜனாதிபதி பைடன் தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.














