கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்திற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு ஜனாதிபதி, கவர்னர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் பட்டங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இதற்கு முன்னதாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி அங்குள்ள தர்பார் அரங்கிற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என பெயர் மாற்றம் செய்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைக்க இருக்கிறார்.