ஆசிப் அலி சர்தாரியின் மகள் ஆசிபா பூட்டோ அலி பாகிஸ்தானின் முதல் பெண்மணி ஆக அறிவிக்கப்பட உள்ளார்.
பாகிஸ்தானின் அதிபராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது இவருடைய மகள் ஆசிபா அலி நாட்டின் முதல் பெண்மணி ஆக அறிவிக்கப்பட உள்ளார். முன்னாள் பிரதமரும் ஜர்தாரியின் மனைவியும் ஆன பெனசீர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அதிபராக பொறுப்பேற்றதன் மூலம் ஜர்தாரி நாட்டின் முதல் குடிமகன் ஆனார். என்றபோதிலும் அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. எனவே அவர் மகள் ஆசிபாவுக்கு முதல் பெண்மணி அந்தஸ்தை ஜர்தாரி வழங்குவார் என்று அவருடைய மூத்த மகள் பக்தவார் பூட்டோ அலி தெரிவித்துள்ளார். ஆசிபா அவ்வப்போது தந்தைக்கு அரசியலில் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இதில் முதன் முறையாக அமையும்.