அட்லாண்டாவில் பைடன், டிரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். தேர்தலின் போது முக்கிய அம்சமாக வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நேரடி விவாத நிகழ்ச்சி இன்று ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்றது. அப்போது அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
பொருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து விவாதித்தனர். தாங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பைடனும், ட்ரம்பும் பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். இந்த விவாதத்தில் சட்டவிரோத குடியேற்றம், கருக்கலைப்பு உரிமைகள், பொருளாதாரம், இஸ்ரேல் போர், வேலையின்மை, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல தலைப்புகளில் அவர்கள் விவாதம் செய்தனர். நேரடி விவாதம் மொத்தம் 90 நிமிடம் நடைபெற்றது.