மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக போடப்படும் தடுப்பூசி பட்டியலில் மூக்கு வழியே செலுத்தப்படும், பாரத் பயோடெக்கின் இன்ட்ராநாசல் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. முதற்கட்டமாக இந்த ஊசி தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325க்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி ஜனவரி 4 வது வாரத்தில் இருந்து கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.