பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் நான்கு நாட்கள் பிரச்சாரம்

பிரதமர் மோடி தமிழகத்தில் ஆறாவது முறையாக நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இதில் தமிழகத்தில் நான்குமுனை போட்டு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐந்து முறை தமிழகத்தில் பிரச்சாரம் […]

பிரதமர் மோடி தமிழகத்தில் ஆறாவது முறையாக நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இதில் தமிழகத்தில் நான்குமுனை போட்டு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐந்து முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க நான்கு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்படி வரும் 9,10,13,14 ஆகிய தேதிகளில் அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் வேலூர்,தி.நகர்,நீலகிரி, ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu