பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். இதில் மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான மே 14ஆம் தேதி வேப்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதனை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்கள் ஆக நடைபெற்று வரும் நேரத்தில் கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பிரதமர் இரண்டு முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார்