பிரதமர் மோடி குவைத் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் முடிவடைந்து டெல்லி திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, அங்கு அவர் சிறப்பான வரவேற்பு பெற்றார். குவைத் விமான நிலையத்தில் துணை பிரதமர் ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பாதுகாப்பு மந்திரி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.பிரதமர் மோடி குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருதை குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா வழங்கி கவுரவம் அளித்தார். அதன் பிறகு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.பயணத்தின் போது, அவர் மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகளில் குவைத்தின் அமீருடன் ஒத்துழைப்பை உறுதி செய்தார். 2 நாள் பயணம் முடிவுற்று, பிரதமர் மோடி டெல்லி திரும்பிய போது, அவர் அங்கு அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.