பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை பயணம் மேற்கொள்ள இருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இந்தியா சென்றபோது, மோடியின் இலங்கை வருகை உறுதி செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையேயான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மேலும் 2023ல் NTPC மற்றும் இலங்கை மின்சார வாரியத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருகோணமலை 135 மெகாவாட் சூரிய மின் நிலையம், மோடியின் வருகையின்போது திறந்து வைக்கப்படும். 2015 முதல் இது மோடியின் 4-வது இலங்கை பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.