இந்தியா பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரின் 25வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று கார்கில் பயணம் சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரின் 25 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இன்று கார்கில் சென்றுள்ளார். மேலும் அங்கு நடைபெற்ற நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். பின்னர் ஷின்குன் லா சுரங்க பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 4.1 கிலோமீட்டர் நீளமுடைய இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையை கொண்டது. இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.