மும்பை - நாக்பூர் சாலையை பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கிறார்.
மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ. நீளத்துக்கு பால்தாக்கரே மகாராஷ்டிரா சாம்ருத்தி மகாமார்க் 6-ம் வழி விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த சாலை மும்பை - நாக்பூர் இடையே நாக்பூர், வார்தா, அமராவதி, வாசிம், புல்தானா, ஜல்னா, அவுரங்காபாத், நாசிக், அகமதுநகர், தானே ஆகிய 10 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
இந்தநிலையில் நாக்பூர் - மும்பை விரைவு சாலை திட்டத்தில் முதல் கட்டமாக நாக்பூர் - ஷீரடி இடையே 520 கி.மீ.க்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இது பொது மக்களுக்காக வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய சாலையை மக்களுக்கு அர்பணிக்கிறார்.