புவனேஸ்வரில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மக்களவைத் தேர்தலுடன் கூடிய ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, மோகன் சரண் மாஜி முதல்வராக கடந்த ஆண்டு பதவி ஏற்றார். பாஜக ஆட்சியின் ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, புவனேஸ்வரில் நாளை (ஜூன் 20) முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதையொட்டி, மாநில அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனதா மைதானத்தில் நடைபெறும் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.