பொதுமக்களிடமிருந்து வங்கிகள் வசூலித்த அபராத தொகை கணக்குகளை மாநிலங்களவையில் நீதித்துறை இணை மந்திரி வெளியிட்டார்.
இதில் 2018 ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஆன ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்காததற்காக அபராத தொகையாக ரூபாய் 21 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக ஏடிஎம் பயன்பாடு, எஸ் எம் எஸ் சேவைக்காக என மொத்தம் 14 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பெருநகரம், நகர்ப்புறம், கிராமப்புறம் என ஒவ்வொரு இடங்களிலும் 3000 முதல் 10 ஆயிரம் வரை 2000 முதல் 5000 வரை 500 முதல் 1000 வரை என இடத்திற்கு ஏற்றவாறு மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கின்றன. இந்த இருப்பு தொகையை பராமரிக்காமல் விட்டால் 400 முதல் 500 வரை அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.