புரோ கபடி லீக் 11வது சீசன் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 44-29 என்ற புள்ளியில் வெற்றி பெற்றது.
11-வது புரோ கபடி லீக் தொடர் அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்றுள்ளன. தற்போது, மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி 44-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வென்றது.